அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, December 29, 2012

சத்தியத்தை வீதிகளிலும், வீடுகளிலும் விளக்கும் INTJ!

0 comments

  குன்றத்தூரில் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட, அல்லாஹ்விற்கு இணையாக்கக் கூடிய, கொடிய செயலான தாயத்து, தட்டு, தகடை அறியாத மக்களிடம் கொடுத்து பிழைப்பு நடத்தி வரும் குன்றத்தூர் பள்ளியின் துணை இமாமாக இருந்த (ஷாகுல்) அப்துல் ஹமீது என்பவருக்கு INTJ மாநில செயலாளர் K.P.M. முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் சத்தியத்தை விளக்கி, அவர் செய்யும் காரியம் மார்கத்தில் தடுக்க பட்டிருக்கிறது என்று எச்சரிக்கை செய்து, பிழைப்பதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கிறது என்று கூறி ஏகத்துவத்தை நோக்கி அழைப்பு விட்டார்.


சத்தியத்தை வீதிகளிலும், வீடுகளிலும் விளக்கும் INTJ! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக தஃவா பணிகளை பல தளங்களில் பல வழிமுறைகளில் செய்து வருகிறது. இது போன்ற தஃவா பணிகளில் ஒன்று வீதிகளில் ஆங்காகே மக்கள் கூடும் இடங்களில் மெகா போன் என்ற ஒலிபெருக்கி மூலமும், தனி பட்ட முறையில் தனி நபர் சந்திப்பு மூலமும், வீதிகளோடு நிற்காமல் வீட்டிற்கே சென்றும் தஃவா செய்து வருகிறது. கடந்த புதன்கிழமை (26-12-12) அன்று INTJ தஃவா குழு, குன்றத்தூர் கிளை தலைவர் அனஸ் தலைமையில் வீதிகளிலும், வீடுகளிலும் சத்தியத்திய மார்க்கத்தின் ஓர் இறை கொள்கையான தவ்ஹீதை (ஏகத்துவத்தை) எடுத்து சொல்லியது. இதில் குன்றத்தூரில் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட, அல்லாஹ்விற்கு இணையாக்கக் கூடிய, கொடிய செயலான தாயத்து, தட்டு, தகடை அறியாத மக்களிடம் கொடுத்து பிழைப்பு நடத்தி வரும் குன்றத்தூர் பள்ளியின் துணை இமாமாக இருந்த (ஷாகுல்) அப்துல் ஹமீது என்பவருக்கு INTJ மாநில செயலாளர் K.P.M. முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் சத்தியத்தை விளக்கி, அவர் செய்யும் காரியம் மார்கத்தில் தடுக்க பட்டிருக்கிறது என்று எச்சரிக்கை செய்து, பிழைப்பதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கிறது என்று கூறி ஏகத்துவத்தை நோக்கி அழைப்பு விட்டார். இதை தொடர்ந்து குன்றத்தூர் மர்கஸில் தர்பியா பயிற்சி வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

0 comments:

Post a Comment