அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Tuesday, June 7, 2011

செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும்

0 comments

செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும்



செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இருப்பினும் செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார். 

பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் : செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

கதிர்வீச்சு அபாயம்செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

ஏனென்றால்! நான் ஒரு தவ்ஹீத் வா " தீ " !!

0 comments

ஏனென்றால்! நான் ஒரு தவ்ஹீத் வா " தீ " !!




* தொழுகைக்கு பாங்குசொன்னவுடன் பக்கத்தில் உள்ள பள்ளியில் தொழாமல், அந்த தொழுகையை தவ்ஹீத் பள்ளியில் மட்டுமே தொழுவேன்!. மற்ற பள்ளி வாசல்களில் ஜனாசா தொழுகை மட்டும் தொழுவேன். ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா  “தீ”

* நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தவரிடம் மட்டும் தான் சலாம் கூறி நலம் விசாரிப்பேன்!. மற்றவரிடம் பேச மாட்டேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”
* நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது எல்லோரையும் கிண்டலும் கேலியும் செய்வேன்!. என் நண்பர்கள் என் இயக்கத்தை பற்றி பேசினால் கண்கள் சிவக்க கோபப்படுவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”
* மேலை நாடுகளின் பொருட்களை வாங்காதீர்கள், அவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றாதிர்கள் என்று எல்லோருக்கும் சொல்வேன்!. ஆனால் அந்த பொருட்களை என் விட்டில் உபயோகப்படுத்துவேன். அவர்களின் கலாச்சாரத்தை நான் பின்பற்றுவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* பேராசை கூடாது என்று உபதேசம் சொல்வேன்!. ஊரில் உள்ள நிலங்களை எல்லாம் வலைத்து போட்டு பிறகு விலை ஏற்றி விற்ப்பேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* ஆடம்பரமான வாழ்க்கை கூடாது என்பேன்!. ஆனால் நான் சுக போகமாக நவீன கண்டுபிடிப்புக்களுடன் வாழ்வேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா“தீ”

* மேலும் நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம் என்று குர் ஆன் வசனம் சொல்லி இருந்தும், நான் தவ்ஹித்வாதி என்று மார்தட்டி பிறருடன் விவாதம் செய்வேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* என் இயக்கம் நடத்தும் பேரணி, ஆர்ப்பட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்க்கும் மற்றவரிடம் தீவிரமாக மைக் செட் முலம் விளாம்பரம் செய்து பணம் வசூல் செய்வேன்!. அதற்க்கு அப்புறம் நான் அவர்களை திரும்பி கூட பார்க்க மாட்டேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ

* வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நபிகளின் போதனைகளை மக்களிடம் பயான் செய்வேன்!. ஆனால் நான் செய்யும் உதவிகளை போட்டோ எடுத்து விளம்பரப் படுத்துவேன்!. ஏன் என்றால் நான் ஒரு தவ்ஹீத்வா “தீ”

* என் இயக்கம் நடத்தும் பேரணி, ஆர்ப்பட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்க்கும் என் விட்டில் உள்ளவர்களை அழைக்காமல், ஊரில் உள்ளவர்களை இலவச வாகனம் முலம் அழைத்துச் செல்வேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* சொந்த ஊரில் ஆடு, மாடுகள் விலை குறைவாக கிடைக்கும் போது அதை வாங்கி குர்பானி கொடுக்காமல், விண் செலவு செய்து ராஜஸ்தான் சென்று அதிகவிலை கொடுத்து ஒட்டகம் வாங்கி வந்து அதை விளம்பரப்படுத்தி குர்பானி கொடுப்பேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* புனிதமிக்க ரமலானில் வெளிநாட்டில் இருந்து வரும் பித்ரா பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கும்போது கூட போட்டோ எடுத்து விளம்பரப் படுத்துவேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* என்னிடம் உள்ள போன்களையும், கம்ப்யூட்டர்களையும் பயன் படுத்தாமல் கம்பெனியில் உள்ள தொலைபேசிகளையும், பேக்ஸ் மிஷினையும், கம்ப்யூட்டர்களையும் என் சொந்த விசயத்திற்க்கு பயன்படுத்துவேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* வீண் விரயம் செய்யவேண்டாம் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள் என்று அழ்கிய முறையில் அடுத்தவருக்கு பயான் செய்து விட்டு என் வீட்டு திருமணத்தை பல ஆயிரம் செலவு செய்து கல்யாண மண்டபத்தில் நடத்தி அதை விடியோவும் எடுப்பேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* என் இயக்கம் நடத்தும் போராட்டங்களுக்கு அனைத்து முஸ்லிம்களையும் அணி திரண்டு வாரீர், வாரீர் என்று அழைப்பேன், அழைத்தும் செல்வேன்!. ஆனால் முஸ்லிம் மக்களின் நல்ல விசயங்களுக்கு பிற அமைப்புக்களூம், ஊரின் ஜமாத்துக்களூம் நட்த்தும் போராட்டங்களுக்கு நான் போகமாட்டேன் !.ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* மனைவி மக்களை விட்டு பிரிந்து வாழ்வது சுன்னத்துக்கு மாற்றமானது (இக்கால கட்டத்தில் குடுப்ம்பத்தோடு இருப்பது ரொம்ப அவசியமானது) என்றூம் தெரிந்தும் நான் வெளிநாட்டில் தனியாக இருந்து இளமையை, காலத்தை கழிப்பேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* என் வருமானத்திற்க்கு தகுந்தார் போல் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ கிரெடிட் கார்டு வைத்து இருப்பேன் பேங்கில் வட்டிக்கு லோனும் வாங்குவேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* எல்லாவற்றிர்க்கும் குரான், ஹதீஸ் என்று ஆதாரம் கேட்பேன்!. என் விசயதிற்கு மட்டும் இவ்விரண்டையும் எங்களுக்கு ஏற்றவாறு வலைப்பேன்!. ஏன் என்றால் நான் ஒரு தவ்ஹீத்வா “தீ”.

இப்படி ஏராளமான விசயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்!. ஏன் என்றால் நான் ஒரு தவ்ஹீத்வா  “தீ”.

கல்வி உதவி தொகை :

0 comments

கல்வி உதவி தொகை :



முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை
வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

     ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
    அலி டவர்ஸ்,
    கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு,
    சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

     இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க்
    ராயபேட்டை,  நெடுஞ்சாலை சென்னை - 14 
    தொலைபேசி: 94440 52530
   சீதக்காதி அறக்கட்டளை,
    688 , அண்ணா சாலை, சென்னை - 06

    ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்,
    688 , அண்ணா சாலை, சென்னை - 06

   B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன்
   4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06
   (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

   சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட்,
    ஜாவர் பிளாசா,
    நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

    முஹம்மது சதக் அறக்கட்டளை
    133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,
    சென்னை - 34

    மெஜெஸ்டிக் பவுண்டேசன்
    117, ஜெனெரல்பேட்டர்ஸ் சாலை ,
    சென்னை - 02

   முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்,
     ஜபார்ஷா தெரு, திருச்சி.

    தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
     118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை,
     சென்னை - 03

   தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட்,
    டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு,
    அண்ணா நகர் - சென்னை 40
    போன் 98400 80564

    அஸ்மா காசிம் அறக்கட்டளை ,
      மாண்டியத் சாலை,
      எழும்பூர் - சென்னை – 08

    ராஜகிரி பைத்துல்மால்,
      கீழத் தெரு, ராஜகிரி - 614 207

      டாம்கோ 807, 
     அண்ணா சாலை, 5 வது சாலை,
      சென்னை

     ஹாஜி. அஹமது மீரான்,
     Managing Director Professional Courier’s
      7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு,
      ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

    மியாசி, புதுக் கல்லூரி வளாகம்,
      பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

     S I E T கே.பி. தாசன் சாலை
      தேனாம்பேட்டை, சென்னை - 18

Saturday, June 4, 2011

படிக்க விரும்பும் மாணவர்-பட்டை தீட்டுவார்களா சமதாய இயக்கங்கள்!

0 comments

படிக்க விரும்பும் மாணவர்-பட்டை தீட்டுவார்களா சமதாய இயக்கங்கள்!


இஸ்லாமிய சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவைகளில் தலித் இன மக்களை விட தாழ்ந்து இருக்கிறார்கள் என நீதிபதிகள் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழுக்கள் சொல்கின்றன. ஆனால் நம்மிடையே அறிவுசால் இளைஞர்கள், மாணவர்கள் இல்லையா?! என்றால் இருக்கிறார்கள். அவர்களுக்க உதவ சமுதாய இயக்கங்கள் தயாரா என்ற கேள்வியினை எழுப்புகின்றார் ஒரு பள்ளி மாணவர்.
    27.5.2011 அன்று பத்தாம் வகுப்பு மாணவர் தேர்வு முடிவுகள் வெளியாயின. என்ன ஆச்சரியம் அதில் ஒரு முஸ்லிம் மாணவர் மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் வாங்கியுள்ளார். அவர் படம் 28.5.2011 பத்திரிக்கையில் வந்தன. நீங்களெல்லாம் நினைத்திருப்பீர்கள் அவர் மாநகரமான சென்னையிலே அல்லது மதுரை, திருச்சி மற்றும் கோவை போன்ற வசதியும், வாய்ப்பும் உள்ள நகரிலிருந்தோ, மிகவும் தரம் வாய்ந்த படிப்பினைத் தரும் பள்ளியிலிருந்தோ, மற்றும் பணத்தினை அள்ளி தெளித்து டூயுசன் வைத்து படித்த மாணவராக இருக்குமென்று. 
    ஆனால் அந்த மாணவர் திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாத்தினையும், ஈமானையும் கட்டியாக பிடித்திருக்கும் மேலைப்பாளைய நகரைச் சார்ந்தவர் என்று நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் இனித்தது. ஏன் தெரியுமா? மேலைப்பாளையத்தில் சாதாரண பீடி சுத்தும் கம்பெனியில் மாதம் ரூ 4000 வருமானத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மூத்த மகன் தான் அந்த மாணவர். தன் தந்தையின் நான்கு பிள்ளைகளில் மூத்த மகனான, மறைந்த ஈராக் அதிபர் மாவீரன் சதாம் ஹூசைனின் பெயரினைத் தாங்கியவர் படித்த பள்ளி முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியாகும்.  தன் குடும்பமே எதிர்பார்க்காத நிலையில் அவர் மாநிலத்தில் மொத்த 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தினை தட்டிச் சென்றுள்ளார்.
    தந்தை அப்துல் ரஹ்மான் தன் மகவினை கையைக் கட்டி, வாயைக் கட்டி மாநிலத்தில் சிறந்த மாணவனாக ஆக்கியதால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றிருப்பார் என நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போது, 'தன் மகன் வெற்றி பெற்றதிற்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் தான் முக்கியம். மேல் படிப்பினை படித்து மெக்கானிக்கல் இன்ஜீரியங் ஆக வேண்டும். என சதாம் விரும்புகிறான். எனக்கு மேலும் மூன்று பிள்ளைகள் இருப்பதால் அவனை எப்படி இன்ஜினீரியங் படிப்பிற்கு படிக்க வைப்பது எனத் தெரியவில்லை என்று கவலையாக உள்ளது' எனக் கூறியுள்ளார்.
    ஏன் இல்லை என்று  சொல்லும் அளவிற்கு நமது சமுதாய இயக்கங்கள் பல்வேறு சேவைகள் செய்து வருவது கண்கூடானது. உதாரணத்திற்கு, 1) மைத்திற்கு ஜனாஸா ஐஸ் பெட்டிகள், 2) அவசர சிகிச்சைகளுக்கு ஆம்புலன்ஸ், 3) அறுவை சிகிச்சைக்களுக்குத் தேவைப்படும் ரத்ததானம்,4) ஏழைக் குமருகளுக்கு திருமண செலவுகள் ஏற்றல், 5) சுயவேலைகள் செய்வதிற்கு பொருளாதார உதவி, 6) வயதானவர்களுக்கு பொருளாதார உதவி போன்ற சேவைகளினை செய்து மக்களின் பாராட்டுதலை செய்கின்றனர.
    ஆகவே நமது சமுதாய இயக்கங்கள் ஸதாம் ஹூசைன் பேன்ற சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவியிரினை அடையாளம் கண்டு அவர்களை தத்தெடுத்து அவர்கள் மேல் படிப்பிற்க்கு உதவுவதுடன் அவர்களுக்கு அரசு மானியமும் கிடைக்க வழிவகை செய்யதால் கூலித்தொழிலாளி அப்துல் ரஹ்மான் போன்ற ஏழைப் பெற்றோர் குடும்பத்தில் உள்ளவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் என்றால் மிகையாகுமா தோழர்களே!
-டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு.........

0 comments

முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு.........

தமிழ்நாட்டில் ஜுன் முதல் டிஸம்பர் மாதத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதில் "மதம்" என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிடவும்.... "முஸ்லிம்" என்பது பதிவது தவறு.
இன்னும் "ஜாதி" என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்...
·        லெப்பை
·        ஸெய்யது
·        தக்கனி முஸ்லிம்
·        அன்ஸார்
·        ஷேக்
·        மாப்பிள்ளை
·        துத்திகோலா

 முக்கிய குறிப்பு:
     ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோரும் "லெப்பை" என்றே குறிப்பிடவும். ஜாதியை குறிப்பிடும்போது "ஸாயிபு, பட்டாணி, ஷரீப், பரிமா"  என்றெல்லாம் குறிப்பிடாதீர்கள். இத்தகவலை தங்களூர் நிர்வாகிகளிடம் (நட்டன்மை & பஞ்சாயத்) தெரிவித்து ஊர் மக்கள் பயனடைய ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
-முஹம்மது முனீர்
துணைத் தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம்.

0 comments

மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம்.

இன்று வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வி்ல் 3வது இடத்தை 494/500 என்ற மதிப்பெண் எடுத்த எம்.ஷபனா பேகம், சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தார். இவர் பல்லாவரம், செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த இந்த மாணவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த சந்திக்க இருக்கும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் முதலிடம் பெற துஆ செய்வதுடன் வெற்றி பெற்று சமுதாயத்திற்காக உழைக்கட்டும் என துஆச் செய்கின்றோம்.
-முஹம்மது ஷாக்கீர்.