பெண்கள் மாநாடான
நந்தம்பாக்கம் INTJ பொதுக் கூட்டம்.
நந்தம்பாக்கம் INTJ பொதுக் கூட்டம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நந்தம்பாக்கம் -குன்றத்தூர் கிளைகள் நேற்று நடத்திய இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் பெண்கள் மாநாடு எனும் அளவிற்கு ஆண்களை விட பெண்கள் ஏராளமனோர் பங்கேற்றனர். அல்ஹம்து லில்லாஹ்
இந்தக் கூட்டத்தில் மதரசா மாணவிகளுக்கான தனித்திறன் போட்டி , மற்றும் வாழ்வாதார உதவிகள் என நந்தம்பாக்கம் -குன்றத்தூர் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் சகோதரி பாரகத்னிஷா 'இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு' எனும் தலைப்பிலும், மாநில பேச்சாளர் மசுதா ஆலிமா 'வரதட்சனை கொடுக்க மாட்டோம் ' எனும் தலைப்பிலும், மாநில செயலாளர் செங்கிஸ் கான் 'குரான் ஒரு வாழும் அற்புதம்' எனும் தலைப்பிலும், தலைவர் எஸ்.எம்.பாக்கர் 'விடுதலைப் போரில் முஸ்லிம்கள்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியின் போது ஊனமுற்ற சகோதரர் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளும், பழுதடைந்த வீட்டை மராமத்து செய்ய ஒரு ஆதரவற்ற பெண்மணிக்கும், மருத்துவ உதவியாக ஒரு சகோதரருக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது. குரான் ஒரு வாழும் அற்புதம் எனும் உரையால் ஈர்க்கப்பட்ட கூட்டத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவ மத போதகர் பாஸ்டர் திலிப் அவர்களுக்கு திருமறை தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.
திரண்டிருந்த பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
ஆண்களில் ஒரு பகுதி
மதரசாமாணவியின் தனித்திறன்
இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு குறித்து பாரகத்னிஷா
குரான் ஒரு வாழும் அற்புதம் -செங்கிஸ் கான்
விடுதலைப்போரில் முஸ்லிம்கள் -எஸ்.எம்.பாக்கர்
மசுதா ஆலிமா- 'வரதட்சனை கொடுக்க மாட்டோம் '
திரண்டிருந்த ஆண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
மூன்று சக்கர வாகனம வாங்கும் பொறுப்பு கிளை நிர்வாகி கையில்
ஆதரவற்ற பெண்ணின் வீட்டை மராமத்து செய்யும் பொறுப்பு நிர்வாகி கையில் நன்றியுரை நிகழ்த்தும் நந்தம்பாக்கம் கிளை தலைவர்
வாழும் அற்புதம் குரானை வாங்கும் கிறிஸ்தவ போதகர் மருத்துவ உதவித் தொகை வழங்கும் தலைவர்
மாமறைக் குரானை மனமுவந்து பெறும் மாற்றுமத சகோதரர்.