அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, December 29, 2012

தாஃவா பணியிணால் வந்த மாற்றம்.

0 comments

 இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் அனகாபுத்தூர் கிளையின் சார்பாக  சென்ற மாதம் சமூக தீமை எதிர்பு பிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் மாநிலச் செயளாலர் K.P.M முஹம்மது மைதீன் அவர்கள் சமூக தீமைகளை கண்டித்து பேசினார் மஃரிப் தொழுகை பாங்கு சொல்லப்பட்டதும் அங்குள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானிய் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு  வெளியே வரும் பொழுது பள்ளிக்கு வெளியே  மாற்று மத சகோதர,சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர் அவர்களுக்கு ஒதி ஊதிவிட்டு   இஸ்லாத்திற்கு முரணாண தாயத்தை பள்ளியின் மோதினார் கட்டினார்.இதை பார்த்த நமது தாஃவா குழு பள்ளிக்கு எதிரேயே நடந்து கொண்டிருக்கும் தீமைக்கு எதிராக மெகா போன் மூலம் கயிறு தாயத்து இஸ்லாத்தில் இல்லை என்றும் அதை கட்டுவதால் எந்த நன்மையும் எற்பட போவது இல்லை காசுக்காக மக்களை எமாற்றி இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றும் சத்தியத்தை வந்திருந்த மக்களுக்கு விளக்கினோம்.பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும்,மோதினாருக்கும் குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் இஸ்லாத்தை எடுத்துரைத்தோம்.அதன் விளைவாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அந்த  மஸ்ஜித்தூர் ரஹ்மானியா பள்ளிவாசல் முன் இங்கு கருப்புகயிறு அல்லது தாயத்து எதுவும் கண்டிப்பாக யாரும் போடக் கூடாது இப்படிக்கு நிர்வாகம் என்று எழுதி ஒட்டப்பட்டுள்ளது.இன்றைக்கு எத்தனையோ சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசள்களில் கயிறு,தாயத்து கட்டப்படுகிறது நாம் அதை கேட்டால் பள்ளிவாசல் உள்ளே கட்ட மாட்டோம் அவர்கள் பள்ளிக்கு வெளியே கட்டி கொள்கிறார்கள்என்று வியாக்கியானம் பேசுபவர்களுக்கு மத்தியில் அனகாபுத்துர் மஸ்ஜிதூர் ரஹ்மானியா நிர்வாகிகள் செய்திருக்கும் செயல் வரவேற்கதக்கது.இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அந்த பள்ளி குர்ஆன் ஹதிஸ் மட்டும் பேசக்கூடிய பள்ளியாக மாறுவதற்கு தூஆ செய்வோம் மாற்றத்தை தரக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே,



காஞ்சி மாவட்ட மாணவரணி

சத்தியத்தை வீதிகளிலும், வீடுகளிலும் விளக்கும் INTJ!

0 comments

  குன்றத்தூரில் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட, அல்லாஹ்விற்கு இணையாக்கக் கூடிய, கொடிய செயலான தாயத்து, தட்டு, தகடை அறியாத மக்களிடம் கொடுத்து பிழைப்பு நடத்தி வரும் குன்றத்தூர் பள்ளியின் துணை இமாமாக இருந்த (ஷாகுல்) அப்துல் ஹமீது என்பவருக்கு INTJ மாநில செயலாளர் K.P.M. முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் சத்தியத்தை விளக்கி, அவர் செய்யும் காரியம் மார்கத்தில் தடுக்க பட்டிருக்கிறது என்று எச்சரிக்கை செய்து, பிழைப்பதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கிறது என்று கூறி ஏகத்துவத்தை நோக்கி அழைப்பு விட்டார்.


சத்தியத்தை வீதிகளிலும், வீடுகளிலும் விளக்கும் INTJ! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக தஃவா பணிகளை பல தளங்களில் பல வழிமுறைகளில் செய்து வருகிறது. இது போன்ற தஃவா பணிகளில் ஒன்று வீதிகளில் ஆங்காகே மக்கள் கூடும் இடங்களில் மெகா போன் என்ற ஒலிபெருக்கி மூலமும், தனி பட்ட முறையில் தனி நபர் சந்திப்பு மூலமும், வீதிகளோடு நிற்காமல் வீட்டிற்கே சென்றும் தஃவா செய்து வருகிறது. கடந்த புதன்கிழமை (26-12-12) அன்று INTJ தஃவா குழு, குன்றத்தூர் கிளை தலைவர் அனஸ் தலைமையில் வீதிகளிலும், வீடுகளிலும் சத்தியத்திய மார்க்கத்தின் ஓர் இறை கொள்கையான தவ்ஹீதை (ஏகத்துவத்தை) எடுத்து சொல்லியது. இதில் குன்றத்தூரில் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட, அல்லாஹ்விற்கு இணையாக்கக் கூடிய, கொடிய செயலான தாயத்து, தட்டு, தகடை அறியாத மக்களிடம் கொடுத்து பிழைப்பு நடத்தி வரும் குன்றத்தூர் பள்ளியின் துணை இமாமாக இருந்த (ஷாகுல்) அப்துல் ஹமீது என்பவருக்கு INTJ மாநில செயலாளர் K.P.M. முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் சத்தியத்தை விளக்கி, அவர் செய்யும் காரியம் மார்கத்தில் தடுக்க பட்டிருக்கிறது என்று எச்சரிக்கை செய்து, பிழைப்பதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கிறது என்று கூறி ஏகத்துவத்தை நோக்கி அழைப்பு விட்டார். இதை தொடர்ந்து குன்றத்தூர் மர்கஸில் தர்பியா பயிற்சி வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

நீதி கேட்டு நெடும் பயணம் சுவர் விளம்பரம்

0 comments

                                  நீதி கேட்டு நெடும் பயணம் சுவர் விளம்பரம்






இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நீதி கேட்டு நெடும் பயணம் வரும் ஜனவரி 30 அன்று செல்ல இருக்கிறது. அதற்கான வேலைகள். அனைத்து மாவட்டங்களிலும் புயல் வேகத்தில் நடைப்பெறுகிறது.நீதி கேட்டு நெடும் பயணத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக 3 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.நீதி கேட்டு நெடும் பபணத்தை எப்படி எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியுமோ அதற்கான வழிமுறைகளில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் கொண்டு செல்லும்.இதே போன்று அனைத்து மாவட்ட,கிளைகளும் வீரியமாக நீதி கேட்டு நெடும் பயணத்தை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆட்சியாளர்கள் திரும்பி பார்க்கும் அளவிற்க்கு கொண்டு செல்ல  முயற்சி எடுத்து உழைக்க வேண்டும்.இறைவன் இடத்தில் தொழுது தூஆ செய்வோம்.வெற்றியை தருவதும் தோல்வியை தருவதும் படைத்த இறைவன் மட்டுமே.......காஞ்சி மாவட்ட மாணவரணி

Thursday, December 6, 2012

டிசம்பர்6 ஆர்பாட்டம்

0 comments

                        டிசம்பர்6 ஆர்பாட்டம்

இந்திய தவ்ஹுத் ஜமாஅத் சார்பாக பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க கோரியும். கட்டி தருவோம் என வாக்குறுதி கொடுத்து இன்று வரை வாய் மூடி மௌனம் காக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்தும். மாபெரும் கண்டண ஆர்பாட்டம்  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப் பெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக. மீனவர் சங்க தலைவர் கபடி மாறன் அவர்கள்,யாதவமகா சபையின் செயலாளர்,அவர்கள் MGR நகர் பள்ளியின் தலைமை இமாம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரைஆற்றினார்கள்.இறுதியாக இந்திய தவ்ஹுத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் கண்டண உரை நிகழ்தினார்.ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டணர்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த டிசம்பர்6 க்குள் பாபர் மசூதி இடம்  முஸ்லிம்களிடம் ஒப்படைக்காவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றினைத்து அரசின் அடக்கு முறைக்கு அஞ்சாது அல்லாஹ்விடம் நன்மையை நாடி உயிரை கொடுத்தாவது  அயோத்தியில்  அல்லாஹ்வின் ஆலயத்தை கட்டுவோம்.  கட்டியே தீருவோம்.
 




பத்திரிக்கையாளர் பேட்டியின் போது மாநில செயளாலர் சீத்திக்






 (ஆர்பாட்டத்தில் சிறுமிகள்)நாங்கள் வளர்வதற்குள் பாபர் மசூதி இடம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கா விட்டால் நாங்கள் வந்து போராடுவோம்  அதற்கான பயிற்ச்சி தான் இது
 உரையாற்றும் யாதவ மகா சபையின் செயலாளர்

 உரையாற்றும் மீனவ சங்க தலைவர் கபடி மாறன்






 (மேடையில் சிறுவர்கள்) பாபர் பள்ளி வாசல் அதே இடத்தில் கட்டி தராவிட்டால் நாங்கள் வந்து போராடுவோம் ஒரு போதும் மறக்க மாட்டோம் டிசம்பர்6ஐ அடுத்த தலைமுறையான நாங்கள் எப்படி கண்டண உரை ஆற்ற வேண்டும் என்பதற்கான பயிற்சி தான் மேடையில் நாங்கள் ஏறி இருக்கிறோம்

 பத்திரிக்கையாளர் பேட்டியின் போது தேசிய தலைவர் S.M பாக்கர்







கண்டண உரையாற்றும் தேசிய தலைவர் S.M பாக்கர்

Saturday, November 24, 2012

குன்றத்தூர் கிளையின் தெருமுனை பிராச்சரம்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம்  குன்றத்தூர் கிளையின் சார்பாக சமூக தீமை தடுப்பு பிரச்சாரம் நடைப்பெற்றது.மாநில பேச்சாளர் சகோதரர் முஹம்மது மைதீன் அவர்கள் வரதட்சனை,மது,புகை ஆகியவற்றின் தீமைகளை எடுத்து மக்களுக்கு விளக்கி கூறினார்.

 முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் அவர்களுக்கு மத்தியில் முஹர்ரம் மாதத்தில் நடைப் பெறும் மார்கத்திற்கு முரணாக நடைப் பெறும் பித்அத்களை தனது ஆனிதனமான பேச்சில் கண்டித்து பேசினார்.அல்ஹம்துலில்லாஹ்