டிசம்பர்6 ஆர்பாட்டம்
இந்திய தவ்ஹுத் ஜமாஅத் சார்பாக பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க கோரியும். கட்டி தருவோம் என வாக்குறுதி கொடுத்து இன்று வரை வாய் மூடி மௌனம் காக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்தும். மாபெரும் கண்டண ஆர்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப் பெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக. மீனவர் சங்க தலைவர் கபடி மாறன் அவர்கள்,யாதவமகா சபையின் செயலாளர்,அவர்கள் MGR நகர் பள்ளியின் தலைமை இமாம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரைஆற்றினார்கள்.இறுதியாக இந்திய தவ்ஹுத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் கண்டண உரை நிகழ்தினார்.ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டணர்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த டிசம்பர்6 க்குள் பாபர் மசூதி இடம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்காவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றினைத்து அரசின் அடக்கு முறைக்கு அஞ்சாது அல்லாஹ்விடம் நன்மையை நாடி உயிரை கொடுத்தாவது அயோத்தியில் அல்லாஹ்வின் ஆலயத்தை கட்டுவோம். கட்டியே தீருவோம்.
பத்திரிக்கையாளர் பேட்டியின் போது மாநில செயளாலர் சீத்திக்
(ஆர்பாட்டத்தில் சிறுமிகள்)நாங்கள் வளர்வதற்குள் பாபர் மசூதி இடம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கா விட்டால் நாங்கள் வந்து போராடுவோம் அதற்கான பயிற்ச்சி தான் இது
உரையாற்றும் யாதவ மகா சபையின் செயலாளர்
உரையாற்றும் மீனவ சங்க தலைவர் கபடி மாறன்
(மேடையில் சிறுவர்கள்) பாபர் பள்ளி வாசல் அதே இடத்தில் கட்டி தராவிட்டால் நாங்கள் வந்து போராடுவோம் ஒரு போதும் மறக்க மாட்டோம் டிசம்பர்6ஐ அடுத்த தலைமுறையான நாங்கள் எப்படி கண்டண உரை ஆற்ற வேண்டும் என்பதற்கான பயிற்சி தான் மேடையில் நாங்கள் ஏறி இருக்கிறோம்
பத்திரிக்கையாளர் பேட்டியின் போது தேசிய தலைவர் S.M பாக்கர்
கண்டண உரையாற்றும் தேசிய தலைவர் S.M பாக்கர்
0 comments:
Post a Comment