அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, December 29, 2012

தாஃவா பணியிணால் வந்த மாற்றம்.

0 comments

 இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் அனகாபுத்தூர் கிளையின் சார்பாக  சென்ற மாதம் சமூக தீமை எதிர்பு பிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் மாநிலச் செயளாலர் K.P.M முஹம்மது மைதீன் அவர்கள் சமூக தீமைகளை கண்டித்து பேசினார் மஃரிப் தொழுகை பாங்கு சொல்லப்பட்டதும் அங்குள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானிய் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு  வெளியே வரும் பொழுது பள்ளிக்கு வெளியே  மாற்று மத சகோதர,சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர் அவர்களுக்கு ஒதி ஊதிவிட்டு   இஸ்லாத்திற்கு முரணாண தாயத்தை பள்ளியின் மோதினார் கட்டினார்.இதை பார்த்த நமது தாஃவா குழு பள்ளிக்கு எதிரேயே நடந்து கொண்டிருக்கும் தீமைக்கு எதிராக மெகா போன் மூலம் கயிறு தாயத்து இஸ்லாத்தில் இல்லை என்றும் அதை கட்டுவதால் எந்த நன்மையும் எற்பட போவது இல்லை காசுக்காக மக்களை எமாற்றி இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றும் சத்தியத்தை வந்திருந்த மக்களுக்கு விளக்கினோம்.பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும்,மோதினாருக்கும் குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் இஸ்லாத்தை எடுத்துரைத்தோம்.அதன் விளைவாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அந்த  மஸ்ஜித்தூர் ரஹ்மானியா பள்ளிவாசல் முன் இங்கு கருப்புகயிறு அல்லது தாயத்து எதுவும் கண்டிப்பாக யாரும் போடக் கூடாது இப்படிக்கு நிர்வாகம் என்று எழுதி ஒட்டப்பட்டுள்ளது.இன்றைக்கு எத்தனையோ சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசள்களில் கயிறு,தாயத்து கட்டப்படுகிறது நாம் அதை கேட்டால் பள்ளிவாசல் உள்ளே கட்ட மாட்டோம் அவர்கள் பள்ளிக்கு வெளியே கட்டி கொள்கிறார்கள்என்று வியாக்கியானம் பேசுபவர்களுக்கு மத்தியில் அனகாபுத்துர் மஸ்ஜிதூர் ரஹ்மானியா நிர்வாகிகள் செய்திருக்கும் செயல் வரவேற்கதக்கது.இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அந்த பள்ளி குர்ஆன் ஹதிஸ் மட்டும் பேசக்கூடிய பள்ளியாக மாறுவதற்கு தூஆ செய்வோம் மாற்றத்தை தரக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே,



காஞ்சி மாவட்ட மாணவரணி

0 comments:

Post a Comment